2 மாதங்களுக்கு பள்ளி & கல்லூரிகளை மூட உத்தரவு? அரசின் அதிரடி முடிவு!
இலங்கையில் படு மோசமான பொருளாதார சிக்கல் நிலவி வருவதால் பொது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இலங்கையில் இந்த ஆண்டு தான் மிகவும் மோசமான பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் காய்கறிகளின் விலை என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பால், அரிசி, காய்கறி என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் அன்றாட செலவையே சமாளிக்கவே முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், படுமோசமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் இலங்கை அரசு பொது போக்குவரத்தை தற்போதைக்கு நிறுத்தம் செய்துள்ளது. எரிபொருள் கட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வரும் இரண்டு மாதங்களுக்கு இலங்கையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளை மூடவும் அரசு முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுத்துறை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
மேலும், காய்கறிகளின் விலையும் பலமடங்கு அதிகரித்து வருவதால் அனைத்து மக்களின் வீட்டிலும் பின்பக்கமாக காய்கறித் தோட்டத்தை சுயமாகவே ஏற்படுத்திக் கொள்ளுமாறு அரசு ஊக்குவித்து கொண்டிருக்கிறது. மேலும், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எரிபொருளை நிரப்புவதற்காக அந்தந்த விற்பனை நிலையங்களில் பல கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் வாகனங்கள் காத்து கிடக்கின்றன. மேலும், பலர் ஒரு லிட்டர் டீசல், பெட்ரோல் வாங்கவே பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை அரசு நிறுத்தம் செய்துள்ளதால் ஓரளவிற்கு எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.