மீண்டும் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சை பெறுவோர் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. மத்திய சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுரைகளை வழங்கியது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தடுப்பு பணியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனால் வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது. 4 மாதங்களாவே வைரஸ் பாதிப்பு வெகுவாக இல்லை.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த ஜூன் மாததொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளது. தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ,32, 83, 793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 68,108ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5 ,24,840ஆக அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பள்ளி & கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – ஆரஞ்சு அலெர்ட் எதிரொலி! அரசு உத்தரவு!
அதில் கேரளாவில் 19,210 பேரும், கர்நாடகாவில் 4,371 பேரும், டெல்லியில் 3,948 பேரும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக 598 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு சிகிசையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 824 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தமாக 196 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.