பள்ளி & கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – ஆரஞ்சு அலெர்ட் எதிரொலி! அரசு உத்தரவு!
அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் 11 லட்சம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஆரஞ்சு அலெர்ட் :
அசாமில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதிதீவிர கனமழை காரணமாக அம்மாநில மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் .பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளை நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக பயிர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Exams Daily Mobile App Download
அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தமிழக பேருந்துகளில் இலவச பயண டோக்கனுக்கான அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
அசாமில் வெள்ள நிலைமை மோசமடைந்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவைத் தூண்டும் இடைவிடாத மழைக்கு மத்தியில், முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, அசாம் பகுதியில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, வடக்கு கவுகாத்தி, கமால்பூர், ரங்கியா மற்றும் கயான் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசாம் மாநிலத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.