தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது பூர்த்தி அடைந்த அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 வயதிலிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரசு பண பலன்களை அளிக்க முடியாத நிலையில் அரசு இருந்தது. அதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தபட்டது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,406 ஆக உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துக்கிடக்கின்றனர். பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஓய்வு வயது அதிகரிப்பால் இளைஞர்களும் பாதிக்கப்படுவர் அதனால் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெறும் வயது 58 ஆகவே மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசு இது குறித்த பரிசீலனைகளை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள். வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.