சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,406 ஆக உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
புதிய நிதி ஆண்டின் முதல் நாள் இன்று, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ.965.50 ஆக தொடர்கிறது.
விலை உயர வாய்ப்பு:
உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி இன்று ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் 20% DA நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்பு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை கடும் விலை உயர்வை இன்று சந்தித்து உள்ளது. அந்த வகையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டு ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேலும் இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அதனால் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையே சமாளிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வரும் இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையின் உயர்வு பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உணவுகளை நம்பியே வேலைக்கு செல்லும் பல இளைஞர்களின் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. ஆனால் இந்த சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி, வடை, உணவுப் பொருட்கள் விலை உயரும் அச்சம் எழுந்துள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சுமையை உருவாக்கியுள்ளது.