மத்திய அரசு பணிகளுக்கு 2021 முதல் ஆன்லைனில் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!!
மத்திய அரசு பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தகுதித்தேர்வு வரும் ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
ஆன்லைனில் தேர்வு:
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸின் பரவல் காரணமாக எந்த துறையின் பணிகளும் நடைபெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. மத்திய அரசு நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியை தங்களால் முடிந்த வகையில் சிறப்பாகவே செய்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிச.31 கடைசி தேதி – தவறினால் ஜனவரி முதல் அபராதம்??
நோய்ப்பரவல் காரணமாக நாட்டில் நடக்க இருந்த பல முக்கிய நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், அரசு சார்பாக நடக்க இருந்த பல முக்கிய தேர்வுகள் இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு வரும் ஆண்டு முதல் மத்திய அரசு பணியாளர்களை ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு:
மத்திய அரசு தனது பணியாளர்களை பொதுவான தகுதித்தேர்வில் மூலமாகத்தான் தேர்வு செய்கிறது. இந்த பணியை தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பணியாளர் தகுதி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்க இருக்கிறது. இந்த ஆன்லைன் பொது தகுதி தேர்வுகளை தேசிய தேர்வு முகமையே நடத்தி குரூப் “பி” மற்றும் “சி” க்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!
தேர்வு மையம்:
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திரசிங், “இந்த ஆன்லைன் தேர்விற்காக நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த தேர்வு மையத்தில் தொலை தூரத்தில் இருந்து வருபவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும், ஆன்லைன் தேர்வு முறையினால் ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்கள் பயனடைவார்கள்” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்