வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிச.31 கடைசி தேதி – தவறினால் ஜனவரி முதல் அபராதம்??
2019-2020ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு டிச.,31ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதால் ஜனவரி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காலஅவகாசம்:
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அதன் காலம் முடிவடைவதற்குள் வருமான வரி செலுத்துபவர்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருடம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு பலவற்றிற்கும் கால அவகாசத்தை நீடித்துள்ளது. அதே போல் 2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் நவம்பர் வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்தது. இருப்பினும் அவகாசம் போதாது என மக்கள் முறையிட்டதால் ஜனவரி இறுதி வரை வருமானவரி செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி – விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது, “வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளுக்கு மட்டுமே ஜனவரி 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தணிக்கை கணக்கு தேவைப்படாதவர்கள் தங்கள் வரியை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ஜனவரி முதல் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்