அரசு பணி பெற இனி அனுபவம் கட்டாயம்.. முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பு – கோவாவில் அமலாகும் புதிய விதி!
வடக்கு கோவாவில் உள்ள தலீகாவ் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் சாவந்த் அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இவர், அரசு பணிகளில் பணிபுரிவது தொடர்பாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அரசு பணி
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அரசு வேலையை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். இதனால் திறமையான நபர்களை தேர்வு செய்வது என்பது சவாலாக உள்ளது. அதனால் அரசு போட்டி தேர்வுகளுக்கான விதிமுறைகளும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அரசு பணியிடத்தில் பணிபுரிய புதிய விதிமுறை ஒன்றை கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
வடக்கு கோவாவில் உள்ள தலீகாவ் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் சாவந்த் அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவில் இவர் பேசியதாவது, அரசு பணியிடங்களுக்கு திறமையான ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு இனி வரும் காலங்களில் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றுள்ளவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி புதிய விண்ணப்பதாரர்கள் நேரடியாக அரசுப் பணியில் சேர இயலாது.
குரூப் 2, 2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் மட்டுமே தேர்ச்சி – TNPSC வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அத்துடன் அரசு பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மாநிலத்திற்கு திறமையான நபர்களை அரசு பணியிடங்களில் பணி நியமனம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் கோவாவில் அரசு பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.