குரூப் 2, 2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் மட்டுமே தேர்ச்சி – TNPSC வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளின் படி, தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வில் பங்கு கொள்ள வேண்டும்.
TNPSC குரூப் 2, 2A ரிசல்ட்:
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC-யின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வுகளின் Prelims தேர்வானது மே 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதி உள்ளனர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு வழக்குகள் காரணமாக பல மாதங்கள் கழித்து நேற்று இந்த தேர்வு முடிவுகள் வெளியானது.
Exams Daily Mobile App Download
TNPSC குரூப் 2, 2A முதன்மை தேர்வு:
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது வரும் 25.02.2023 அன்று நடைபெற உள்ளதாக TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு கட்டணமாக ரூ. 200/- செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 லட்சம் பேர் எழுதிய முதல்நிலை தேர்வில், 5.8% பேர் மட்டுமே அடுத்தகட்ட தேர்வுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது.