மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – அரசு ஆலோசனை!

0
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் - அரசு ஆலோசனை!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் - அரசு ஆலோசனை!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – அரசு ஆலோசனை!

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் கூடுதல் சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இந்த புதிய விதிமுறைகள் தகுதியான நபர்களுக்கு பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்போது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வந்த மத்திய அரசு இத்திட்டத்தில் மேலும் சில கூடுதல் நலத்திட்டங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

டிச.27 முதல் ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail செயல்பட தடை? அதிரடி அறிவிப்பு!

இப்புதிய விதிமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அளித்துள்ள தகவல்களின்படி, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டின் மக்கள் தொகையில் 86 சதவீதம் பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் சுமார் 1.5 கோடி பேர் வேறு மாவட்டங்கள், வெவ்வேறு மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். இது தவிர நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் ரேஷன் உணவுப் பொருட்களால் பயனடைந்து வருகின்றனர். இதில் பலர் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலவரத்தில் காணப்படுகின்றனர். அதனால் புதிதாக உருவாக்கப்படும் இத்திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் – நெட்டிசன்கள் வரவேற்பு!

இதை தொடர்ந்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே கூறுகையில், ‘மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளின் தரம் மாற்றப்பட இருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் கடந்த 6 மாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலோசனையில் மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளின் படி புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் போது தகுதியுடையவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள், நிதி உதவி ஆகியவை கிடைக்கும். அதனால் போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!