மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் – முக்கிய அம்சங்கள்!
கோவிட் பாதிப்பை அடுத்து புலம்பெயர்ந்தோர்களின் உணவு பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் சுமார் 75 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.
முக்கிய திட்டம்:
கோவிட் தொற்று நோயின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து தொழில் துறைகளும் முடங்கியது. மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டனர். இதனால் சாதாரண நிலையில் இருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மத்திய அரசு விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
இந்தியாவில் பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் நாட்டின் பசியின்மை என்பது குறைக்கப்பட்டு வருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டின் வருமான இழப்பு, உணவுப் பற்றாக்குறை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை போன்றவை பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ரேஷன் கார்டுகளை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்ல உதவி செய்கிறது. இந்தத் திட்டம் தற்போது 34 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 23 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் சுமார் 75 கோடி பயனாளிகளை கொண்டுள்ளது.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!
இந்த திட்டத்தின் மூலம், NFSA-ன் கீழ் உள்ள அனைத்து தகுதியான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எங்கிருந்தும் தங்கள் ரேஷன் கார்டின் மூலம் பயனடையலாம். ONORC இன் கீழ் தொடங்கப்பட்ட ‘மேரா ரேஷன்’ செயலி, ஆங்கிலம், ஹிந்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, குஜராத்தி, மராத்தி மற்றும் பங்களா போன்ற பல மொழிகளில் கிடைக்கிறது. 90 சதவீத ரேஷன் கார்டுகளில் ஆதார் இணைக்கப்பட்டிருந்தாலும், 37 சதவீத கார்டுகள் மட்டுமே மொபைல் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.