ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில் இன்று (டிச.28) முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் ஒமிக்ரான் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கர்நாடகாவில் இன்று முதல் 10 நாள் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘பொது சுகாதார நலன் கருதி மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் டிசம்பர் 28, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் டிசம்பர் 28 ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த காலங்களில் பப்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 28 முதல் மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதனுடன் அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பிற கட்டுப்பாடுகளின் படி,
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
- வெளிப்புற வளாகங்களில் எந்த விழாக்களும், பார்ட்டிகளும் இருக்காது.
- குறிப்பாக டிஜேக்கள் மற்றும் பெரிய கூட்டங்களுடன் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முற்றிலும் தடை செய்யப்படுகின்றன.
- உணவகங்கள், ஹோட்டல்கள், பப்கள், கிளப்புகள் ஆகியவை டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்