இந்தியாவில் பரவும் ஓமைக்ரான் XXB திரிபு – அச்சத்தில் உறைந்த மக்கள்..மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஓமைக்ரான் திரிபு பற்றிய பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஒமைக்ரான்:
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிகையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது சீனாவில் அதிகரிக்கும் தொற்றுக்கு ஓமைக்ரான் துணை வகைகள் தான் காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. அனைத்து இடங்களிலும் கொரோனா பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஓமைக்ரான் XXB திரிபு வைரஸ் குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு – நகை பிரியர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை XXB திரிபுக்கு காய்ச்சல், இருமல் போன்றவைகள் அறிகுறிகளாகும் என்று வெளியான அறிக்கை போலியானது. அத்துடன் இந்த ஓமைக்ரான் டெல்டாவை விட 5 மடங்கு ஆபத்தானது என்று கூறப்படுவது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது.