தமிழக காவல் துறையினருக்கு வந்த அதிரடி அலர்ட் – தவறினால் சட்ட நடவடிக்கை!!

0
தமிழக காவல் துறையினருக்கு வந்த அதிரடி அலர்ட் - தவறினால் சட்ட நடவடிக்கை!!
தமிழக காவல் துறையினருக்கு வந்த அதிரடி அலர்ட் - தவறினால் சட்ட நடவடிக்கை!!
தமிழக காவல் துறையினருக்கு வந்த அதிரடி அலர்ட் – தவறினால் சட்ட நடவடிக்கை!!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் அனைத்து காவல்துறையினருக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

டிஜிபி எச்சரிக்கை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், அரசு துறைகளில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் பலர் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதன் முதல் வரிசையில் தமிழக தலைமை காவல் அதிகாரியாக சைலேந்திர பாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். மிகவும் நேர்மையாகவும், கட்டுப்பாடுகளுடனும், சிறப்பாக பணியாற்றும் இவர் காவல் அதிகாரி பதவி ஏற்றது முதல் காவலர்களுக்கு பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியது காவலர்களின் கடமை. இதனால் காவலர்கள் பணி நேரத்திலும், பொது வாழ்க்கையிலும் மிகவும் நேர்மையாகவும், சரியான முறையிலும் நடந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இதைத்தவிர காவல் நிலையங்களை கண்காணிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் பரவும் ஓமைக்ரான் XXB திரிபு – அச்சத்தில் உறைந்த மக்கள்..மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் மக்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதைப்போலவே, அனைத்து காவல் துறையினரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் பைக்கில் பணிக்கு வரும் காவலர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், போலீஸ் என்று கூறி விவாதம் செய்வோரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!