வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு – நகை பிரியர்கள் உற்சாகம்!

0
வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு - நகை பிரியர்கள் உற்சாகம்!
வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு - நகை பிரியர்கள் உற்சாகம்!
வெகு நாட்கள் கழித்து ஆறுதல் அளித்த தங்கம் விலை.. ரூ.464 குறைவு – நகை பிரியர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 464 குறைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு 400 ரூபாய்க்கு மேல் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு சவரன் 40,000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அத்துடன் வழக்கமாக தங்க அணிகலன்களை அணியும் நகைப்பிரியர்களும் விலை உயர்வால் நகைகள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றமடைந்து வருவதால் இதன் விலை இன்று குறையுமா? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 464 குறைந்துள்ளது.

தமிழக கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா – அரசு எடுத்த முக்கிய முடிவு!

Exams Daily Mobile App Download

தற்போது ஒரு சவரன் ரூ. 40,528க்கு விற்பனையாகி வருகிறது. அத்துடன் ஒரு கிராம் தங்கம் ரூ.58 சரிந்து ரூ. 5,066க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.73.70க்கு விற்பனையாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் தங்க நகைகள் வாங்க முற்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!