நாடு முழுவதும் பரவும் ஒமைக்ரானின் புதிய வகை BA வைரஸ் – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வரும் நிலையில் பலர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் மூன்று அலைகள் நாடு முழுவதும் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. அதனால் பல மாநிலங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் இதற்கு உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரானின் புதிய வகை BA.2.75. என்ற புதிய துணை வகை ஒமைக்ரான் கொரோனா பரவல் தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
TN-TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
அதில் உலகளவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தையதைவிட மிகவும் வித்தியாசமாகத் தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படுகிறது. நாம் இன்னும் கொரோனா வைரஸ் உடன் தான் இருக்கிறோம். அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாநில அரசுகள் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.