மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் ஹாப்பி நியூஸ்!
பீஹார் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி கடந்த ஏப்ரல் மாதம் 3% அதிகரிக்கப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மற்ற மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அகவிலைப்படியை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பரிசீலனைகள் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு கட்ட போராட்டங்களும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர் .
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 4% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள அதிகரிப்பு விவரங்கள் இதோ!
இந்த வரிசையில் தற்போது பீகார் மாநில அரசும் இனைந்துள்ளது. அம்மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் கடைசி ஊதியத்தில் 50% தொகை பென்சனாக கிடைக்கும். அரசு ஊழியர் இறந்துவிட்டாலும் அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும். பீகார் அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வந்தனர். அதனால் தற்போது பீஹார் அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.