மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 4% அகவிலைப்படி (DA) உயர்வு? சம்பள அதிகரிப்பு விவரங்கள் இதோ!
மத்திய அரசு பணியாளர்களுக்கு விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது 2022 ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை மீண்டும் அதிகரிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்த ஊடகச் செய்திகளின்படி, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் ஏப்ரல் தரவுகளின் அடிப்படையில், டிஏ தொகை 5 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தொகை 4 அல்லது 5% ஆக உயர்த்தப்பட்டால் மொத்த DA 34% லிருந்து 38 அல்லது 39% ஆக உயரும். உண்மையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. அதன்படி ஜூலை மாத தவணைக்கான DA உயர்வு ஏற்பட்டால் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். ஏனென்றால் ஏப்ரல் வரை AICPI குறியீட்டு எண் 2.7 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மே மாதத்தின் புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், இத்தொகை 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் ஜூன் மாதத்தில் AICPI குறியீடு 129ஐ எட்டினால், அகவிலைப்படி தொகை 4 முதல் 5% வரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தால், ஊழியர்களின் சம்பளம் 2.60 லட்சமாக உயரும். இந்த DA உயர்வின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில் 38%ல் மொத்த DA ரூ.21,622 ஆகவும், சம்பளம் மாதம் ரூ.2,276 ஆகவும் உயரும். மேலும், ஆண்டு சம்பளம் ரூ.27,312 ஆக இருக்கும். இதுவே ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில் மாதம் ரூ.8640 மற்றும் ஆண்டு பலன் ரூ.1,03,680 வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.