அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!

அரசு ஊழியர்களுக்கு பல நலன்களை பெற்றுத் தரும் பழைய ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் நீக்கப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதற்காக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திய முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது. நவம்பர் 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட ரூ.17,000 கோடியை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவை மாநில அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (பிஎஃப்ஆர்டிஏ) அனுப்பியுள்ளது. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று ராஜஸ்தான் அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலை அறிவிப்பு – 10வது, 12வது தேர்ச்சி போதும்..!

மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான பங்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் 10 சதவீதப் பிடித்தம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி விதியின்படி அடிப்படை சம்பளத்தில் குறைந்தபட்சம் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்குகிறது. 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட ரூ.39,000 கோடியை திரும்பப் பெற வேண்டும் என்ற ராஜஸ்தான் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. ராஜஸ்தான் அரசு 2004-ல் இருந்து திரட்டப்பட்ட நிதியை திரும்பப் பெற்று பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் மாற்றுவதாக கூறியது.

Exams Daily Mobile App Download

ஜனவரி 1, 2004 அன்று மற்றும் அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்த விதிகளில் தேவையான திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவின் மூலம், ஜனவரி 1, 2004 அன்று மற்றும் அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், அவர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றிருப்பார்கள். இதனுடன், அவர்கள் ராஜஸ்தான் அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதியையும் பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!