தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அவை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முதலில் அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் TNPSC தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தமிழகத்தில் 80 ரூபாயைத் தாண்டிய தக்காளியின் விலை – வேதனையில் பொதுமக்கள்!
இதனை எதிர்த்து பலரும் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது பேசிய மனிதவளத் துறை அமைச்சர் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு கிடைத்தால் அவர் அதே அலுவலகத்தில் பணியாற்றக்கூடாது. ஆனால் அந்த விதிகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை என்று குறிப்பிட்டார்.
Exams Daily Mobile App Download
இந்த முறை திமுக ஆட்சியில் அது மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது என்பது விதிமுறை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.