தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை அளிப்பது குறித்த முக்கிய தகவலை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு பொய் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து உள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பொதுமக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் அல்லி நகரத்தில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், திமுக மூத்தத் தலைவரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினர்.
Exams Daily Mobile App Download
அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்னும் ஓராண்டில் நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். மேலும் கூட்டுறவு துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் 5000 பணியிடங்கள் ஆறு மாதங்களில் நிரப்பப்படும் மற்றும் சத்துணவு பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.