தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!
தமிழகத்தில் பட்டதாரி முதுநிலை ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை அதனால் வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நடப்பது ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
இதனையடுத்து கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. நடப்பு ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போதைய பணியிடங்களில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பட்டதாரி முதுநிலை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Exams Daily Mobile App Download
இதில் பணி நிரவல் கலந்தாய்வில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே பெற்று வழங்கிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களது உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை கடந்த காலங்களில் வழங்கியது போல் தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.