ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – NPS மற்றும் OPS திட்டத்தின் முக்கிய வேறுபாடுகள் இதோ!
ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பழைய ஓய்வூதிய திட்டத்திலிருந்து NPS எவ்வாறு வேறுபடுகிறது என்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் தவிர பஞ்சாப், தமிழ்நாடு, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் தயாராகி வருகின்றன. முன்னதாக ஜனவரி 1, 2004 அன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்திய அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அறிமுகப்படுத்தியது. இந்த NPS கொண்டு வந்த ஒரு வருடத்திற்குள், கிட்டத்தட்ட அனைத்து பெரிய மாநிலங்களும் அதை தங்கள் மட்டத்தில் செயல்படுத்தின.
தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
அந்த வகையில் பிப்ரவரி 28, 2022 வரை மாநில அரசுகளின் 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் NPS இன் கீழ் கொண்டு வரப்பட்டனர். இப்போது 22 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் இதன் பயனாளிகளாக உள்ளனர். இதனால் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு சவால்களை அதிகரிக்கும் என்று கருத்துக்கள் எழுந்திருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:
- பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி உள்ளது.
- ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
- ஓய்வு பெற்ற பிறகு ஒரு நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- அதாவது ஊழியர்கள் பெறும் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக பெறப்படுகிறது.
- ஓய்வூதியத் தொகை முழுவதையும் அரசே வழங்குகிறது.
- அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், குடும்பத்தைச் சார்ந்தவர் ஓய்வூதியம் பெறுவார்.
NPS திட்டத்தின் கீழ் என்ன பலன் கிடைக்காது?
- என்பிஎஸ் கீழ் எந்த பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வசதியும் கிடைக்காது.
- சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.
Exams Daily Mobile App Download
- ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை
- ஊழியருக்கான ஓய்வூதியத் தொகை பங்குச் சந்தை வருமானத்தைப் பொறுத்தது.
- ஒரு ஓய்வூதிய காப்பீட்டு நிறுவனம் ஒரு வருடாந்திரத்தை வாங்கிய பிறகு NPS இல் கொடுக்கும்.
- பணவீக்கம் மற்றும் ஊதியக் கமிஷனின் பலன் NPS இல் கிடைக்காது.
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சவால்கள்
- மாநில பட்ஜெட்டில் பெரிய பாதிப்பு ஏற்படும்.
- மாநில அரசுகளின் சுமை அதிகரிக்கும்.
- இருப்பினும், என்பிஎஸ்ஸில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு என்ன நடக்கும் என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.