ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஜூலை 24ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 4ம் அலைப்பரவல் காரணமாக தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15%க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இதை கருத்தில் கொண்ட அரசாங்கம் அனைத்து விதமான பள்ளிகளையும் அடுத்த வாரம் வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் ஞானபிரகாஷ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘மாநிலத்தில் கொரோனா தொற்றின் நேர்மறை விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் பொது நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைந்த தனியார் பள்ளிகள் ஜூலை 24ம் தேதி வரை மூடப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!
இதற்கு முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூலை 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பரவல் சூழ்நிலையால், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாததை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 216 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.