சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைவை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்படுகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் என்பது ஒரு வகையான கலாசாரமாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி தங்கம் ஒரு வகையான சேமிப்பு, சமூக அந்தஸ்து என்ற நிலைக்கு வந்து விட்டது. இந்த நிலையில் தினந்தோறும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு பங்கு சந்தை சரிவு, உலக பொருளாதாரம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதாவது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கத்தின் விலையும் விலை அதிகரிக்கும்.
Exams Daily Mobile App Download
மேலும் முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் தங்கம் விலை அதிகரிக்கிறது. தற்போது உலக நாடுகளில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இறக்குமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மேலும் இறக்குமதி வரியும் உயர்த்தபட்டுள்ளது. அதனால் தங்கம் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதங்களில் நிலவிய உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்பாராத அளவு உயர்ந்த தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து தான் வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.4,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது அதாவது சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து, ரூ.61,70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.