தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளின் முன் அறிவிப்பு பலகை!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி கடைகளின் முன் அறிவிப்பு பலகை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி கடைகளின் முன் அறிவிப்பு பலகை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளின் முன் அறிவிப்பு பலகை!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளில் தகவல் பலகை கட்டாயம் காட்சிபடுத்த வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

தகவல் பலகை கட்டாயம்:

ஒரு இந்திய குடிமகனின் முக்கிய முதன்மை ஆவணம் ரேஷன் அட்டை ஆகும். தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை , குடும்பத்தின் ஆண்டு வருமான அடிப்படையில் 5 வகைகளாக உள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு ரேஷன் கடைகளில்,வேலை நேரம், பொருட்களின் ஆரம்ப இருப்பு, விநியோகிக்கப்பட்டது. இறுதி இருப்பு உள்ளிட்ட தினசரி விவரங்கள், பொருட்களின் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை உள்ளடங்கிய தகவல் பலகை பராமரிக்கப்படுவது கட்டாயம் ஆகும்.

ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!

இருப்பினும் சில ரேஷன் கடைகளில் இந்த தகவல் பலகை சரியாக பராமரிக்கப்படுவதில்லை , இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

மேலும் இந்த தகவல் பலகையில் ரேஷன் கடை தொடர்பான புகார் தெரிவிக்க உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர், துறை செயலாளர், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர், சென்னை மாவட்ட துணை ஆணையர், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் அடங்கிய தகவல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் இந்த நடைமுறைக்கு முழு பொறுப்புடையவர்கள் சுற்றறிக்கையின் மீதான பணி முன்னேற்றம் குறித்த நிறைவு அறிக்கை மார்ச் 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!