தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரம் எடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று அச்சத்தால் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – விரைவில் பட்ஜெட்டில் அறிவிப்பு!
இந்த முயற்சிகளால் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்தது. அதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!
பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியாளர்களாகவும், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும் செயல்படவுள்ளது. அதனால் பள்ளிகளில் பிப்ரவரி 19ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 19 ஆம் தேதி தேர்தல் அன்று விடுமுறை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை, பிறகு 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று விடுமுறை இதன் பிறகு 23ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.