2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பரிந்துரை – மத்திய அமைச்சகம் முக்கிய அறிவிப்பு!
நாட்டில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்குவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15 ம் தேதிக்குள் பதிவேற்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.
பத்ம விருதுகள்:
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருதுகள் உள்ளது. அதிலும், பத்ம விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் சேவை செய்து வருபவர்களையும், சாதனை செய்து வருபவர்களையும் கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றது.
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும், மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், வழங்கப்படுகின்றது. முன்னதாக மாநில அரசுகள்,யூனியன் அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக விருதுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் தவிர்க்க முடியாத வகையில், அதே சமயம் விளம்பரம் ஏதுமின்றி தங்களது துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2022 – உடனே விரையுங்கள்…!
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை தற்போது மத்திய அரசு வரவேற்கிறது. இதற்கான பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள https://awards.gov.in/ என்ற