அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி கோதுமை கிடையாது!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - இனி கோதுமை கிடையாது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - இனி கோதுமை கிடையாது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி கோதுமை கிடையாது!

உத்திரபிரதேசத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கோதுமை கிடைக்காது. கோதுமைக்கு பதிலாக அரிசி மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாநிலத்தின் 15 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும் இது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி தகவல்:

கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அந்த வகையில் மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் 3 மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், வரும் அக்டோபர் வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில் நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், கோதுமை கொள்முதல் செய்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் PMGKAY திட்டத்தின் கீழ் உ.பி.க்கு கோதுமையை மத்திய அரசு ஒதுக்கவில்லை. ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முதல் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மூன்று கிலோ கோதுமை, இரண்டு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. கோதுமை ஒதுக்கீடு ஒதுக்கீட்டில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பீகார், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு PMGKAY திட்டத்தின் கீழ் கோதுமை வழங்கப்படவில்லை. அதற்கு அரிசி மூலம் இழப்பீடு வழங்கப்படும். உ.பி.யில் உள்ள கோதுமை கையிருப்பைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு நான்கு கிலோ அரிசியுடன் ஒரு கிலோ கோதுமை வழங்கலாமா அல்லது ஐந்து கிலோ அரிசி மட்டும் வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த திருத்தம் செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதே சமயம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனில் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்க வேண்டுமா அல்லது ஒதுக்கீட்டில் சிறிது திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!