தமிழகத்தில் மறு ஒட்டு எண்ணிக்கை தேவையில்லை – தலைமை தேர்தல் அதிகாரி!!

0
தமிழகத்தில் மறு ஒட்டு எண்ணிக்கை தேவையில்லை - தலைமை தேர்தல் அதிகாரி!!
தமிழகத்தில் மறு ஒட்டு எண்ணிக்கை தேவையில்லை - தலைமை தேர்தல் அதிகாரி!!
தமிழகத்தில் மறு ஒட்டு எண்ணிக்கை தேவையில்லை – தலைமை தேர்தல் அதிகாரி!!

தமிழகத்தில் நேற்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் மறு ஓட்டு எண்ணிக்கை எந்த தொகுதியிலும் தேவை இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மறு ஓட்டு எண்ணிக்கை:

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக நேற்றே அறிவிக்கப்பட்டது.

ஜல் சக்தி அமைச்சகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021

அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியும், 75 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதால் திமுக கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், மே 7 ம் தேதி அன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம், கொரோனா சூழலில் சட்டசபை பொதுத்தேர்தல் நடத்துவது மிகவும் சவாலாக இருந்தது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின் இன்று மாலை கவர்னருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். எந்த அரசியல் கட்சியும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக கேட்கவில்லை. இதனால் தமிழகத்தில் எந்த தொகுதியிலும், மறு ஓட்டு எண்ணிக்கை தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!