தமிழகத்தில் இனி சுழற்சி முறையில் மின்தடை? மின்வாரியம் விளக்கம்!
தமிழகத்தில், சீர்காழி, பொறையார் பகுதிகளில் இன்று (ஜூன் 18) முதல் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் தடை ஏற்படாமல் சீரான முறையில் மின் விநியோகம் இருக்கும்.
மின்தடை:
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. மின்சார கேபிள்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டிகள் உதவியுடன் மின் வாரியம் மின் சப்ளை செய்து வருகிறது. சில சமயங்களில், போதிய அளவு மின்சாரம் கிடைத்தாலும் மின் பெட்டிகள் சேதம் காரணமாக சில இடங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறு சேதம் அடைந்த பெட்டிகளில் உள்ள கம்பிகள் திருடப்படுவதோடு, வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்துக்கு புகார்கள் வருகின்றன.
Exams Daily Mobile App Download
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு பற்றிய தகவல் முன்னதாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் இருக்கும். இந்நிலையில் சீர்காழி, பொறையார் பகுதிகளில் இன்று (ஜூன் 18) முதல் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட உள்ளதாக என மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புகைப்படம், லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் விவரங்களை மறைக்கும் புதிய அம்சம்!
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சீர்காழி மின் கோட்டத்துக்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், மணல்மேடு, ஆச்சாள்புரம், அரசூா், மேமாத்தூர், எடமணல், திருமங்கலம், கிடாரம்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு காரணங்களால் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் 30-ஆம் தேதி மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.