தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை – அமைச்சர் அதிரடி!

0
தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை - அமைச்சர் அதிரடி!
தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை - அமைச்சர் அதிரடி!
தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை – அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் முழு ஊரடங்கு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பதிவு மையத்தை தொடங்கிய பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மக்களின் நலன் கருதி முதலமைச்சர் அவர்கள் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 26 ஆயிரம் பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் அதில் சுமார் 21987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

கொரோனா தாக்கத்திலிருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்காக 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பதிவு மையத்தை தொடங்கி வைத்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 23.39% சம்பள உயர்வுடன் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு – முழு விவரம் இதோ!

இந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 1 லட்சமாக இருந்த மருத்துவ காப்பீட்டு தொகை 5 லட்சமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாக பல்வேறு தகவல் வெளியாகியது. இந்த தகவல்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை என கூறவில்லை, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பல மாதங்கள், வாரங்களுக்கு ஊரடங்கு இருக்காது. ஆனால் ஞாயிற்று கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு தொடர்ச்சியாக இருக்கும்” என கூறியதாக விளக்கமளித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!