ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான நேரம் – ஆன்மிக விளக்கம்!

0
ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான நேரம் - ஆன்மிக விளக்கம்!
ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான நேரம் - ஆன்மிக விளக்கம்!
ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான நேரம் – ஆன்மிக விளக்கம்!

தமிழகத்தில் ஆன்மீகத்தின் படி பொங்கல் பண்டிகை 13ம் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று என்ற தகவல் ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் அதிகம் பரவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மகாமகோபாத்யாய ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரி விளக்கியுள்ளார்.

பொங்கல் பண்டிகை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை தமிழர் திருநாள், தை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி என்று அழைக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுவர். தை முதல் நாள் சூரியன் மகர ராசியில் அடியெடுத்து வைக்கும் நாளில் அவரை வழிபாடு செய்வது வழக்கம் சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.

தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை – அமைச்சர் அதிரடி!

இப்பண்டிகை வருவதற்கு முன்னரே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது, வண்ணம் பூசுவது, வண்ண கோலமிட்டு பொங்கல் பானையை அலங்கரிப்பது என்று பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தயாராகி வருகின்றனர். இந்த வருடம் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை 14ம் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று என்ற தகவல் ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் அதிகம் பரவி வருகிறது. இது குறித்து மகாமகோபாத்யாய ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரி இடம் கேட்ட போது பொங்கல் பண்டிகை மாற்றத்திற்கு சில பஞ்சாங்கத்தில் தை மாதப் பிறப்பு 14ம் தேதி பிற்பகலில் நிகழ்வது தான் காரணம் என்கிறார்.

சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதன்படி பார்த்தால் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் பொங்கல் பண்டிகை உண்மையில் பொங்கல் பண்டிகை இரண்டு நாள்களுக்கு வர முடியாது. ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும். மாலையில் வருகிறது என்பதற்காக பண்டிகை மறுநாள் வருகிறது என்று சொல்லக்கூடாது. சூரிய உதயத்துக்குப் பின் மறைவதற்குள் எப்போது அந்த நேரம் வந்தாலும் அது அன்று தான். சூரியன் 14ம் தேதியே மகரத்துக்குள் வந்து விடுகிறார். அதனால் அன்றைய தினமே பொங்கல் பண்டிகை அவரை வரவேற்கும் விதமாக காலையிலேயே பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!