சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் திடீர் என்று இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறி, இறங்கியும் காணப்பட்ட நிலையில் தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நகைக்கடை வியாபாரிகளும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி:
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொருளாதார பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கால் திருமணங்கள் பெரிதும் நடைபெறாததால் நகைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தங்கம் விலை ஏறி, இறங்கியும் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகை விற்பனையாளர்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் டிவி “பிக் பாஸ்” பிரியங்காவின் கணவர் பற்றி மறைக்கப்பட்ட உண்மை – அவரே சொன்ன விளக்கம்!
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்தவற்றை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை இன்று அதிகமாக உயர்ந்துள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.35,920 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,510 ஆக விற்பனையாகிறது. தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65 க்கு விற்பனை செய்யப்படுகிறது.