மாநில அரசு ஊழியர்களுக்கு 23.39% சம்பள உயர்வுடன் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு – முழு விவரம் இதோ!
சமீபத்தில் நடைபெற்ற ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கு 23.39% சம்பள உயர்வுடன் ஓய்வு பெறும் வயதை 62 ஆக நீட்டித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
சம்பள உயர்வு
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி அறிவித்த பிறகு, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வு, சம்பள உயர்வு ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு 23.39 சதவீதம் சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இப்போது ஆந்திர பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மூலம் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விரிவாக காணலாம்.
தமிழகத்தில் போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
- இப்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, இந்த மாற்றம் ஜூலை 1, 2018 முதல் அமலுக்கு வரும்.
- ஆனால் பொருளாதார பலன்கள் ஏப்ரல் 1, 2020 முதல் வழங்கப்படும்.
- உயர்த்தப்பட்ட சம்பளம் ஜனவரி 2022 முதல் வழங்கப்படும்.
- அதாவது, இந்த மாதம் முதல் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும்.
- அகவிலைப்படி தொகையுடன் காப்பீடு, வருங்கால வைப்பு நிதியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது
- இந்த நடவடிக்கையானது கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.10,247 கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
- இருப்பினும், இது ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்களுக்கு பலனளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் வெளியான சமீபத்திய 7வது ஊதியக் குழு செய்தியின்படி, ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகையையும் ஜனவரி 2022 இன் சம்பளத்துடன் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது தவிர, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு போன்றவை உள்ளிட்ட மீதமுள்ள நிலுவைத் தொகைகள் ஏப்ரல் 2022 க்குள் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி முடிவு ஜூன் 30க்குள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.