தமிழகத்தில் போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஜனவரி 14, 15, 16ம் தேதி உள்ளிட்ட நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
போகி பண்டிகை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் விவசாயிகளின் உயர்வைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தை பொங்கல் நாளான ஜனவரி 14ம் தேதியும், மாட்டு பொங்கல் நாளான ஜனவரி 15ம் தேதியும், காணும் பொங்கல் தினமான 16ம் தேதியும் அரசு விடுமுறையாக அளிக்கப்படுகிறது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
இதையடுத்து பொங்கல் தினத்துக்கு முன் தினமான போகி பண்டிகை அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளுக்கு ஏற்றவாறு வீட்டில் உள்ள பொருட்களை தூய்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் மார்கழிக்கு பிறகு தொடங்கும் தை மாதமான அறுவடை காலத்தை சிறப்பாக வரவேற்க ஆண்டுதோறும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு தைப்பூச தினமான 18ம் தேதியும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்றும் அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் 2021ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் – நீதிமன்றம் கேள்வி!
இவ்வாறு தொடர்ச்சியாக ஜனவரி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை அரசு விடுமுறையை அரசு அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. இதனை தொடர்ந்து பொங்கல் தினத்துக்கு முன் தினமான போகி பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் ஜனவரி 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை வழங்கப்படும். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.