தேசிய ஆயுர்வேத நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,77,500/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Assistant Professor, Accountant, Medical Officer, Nursing Officer, Pharmacist, Administrative Officer, Matron ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 23 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) |
பணியின் பெயர் | Assistant Professor, Accountant, Medical Officer, Nursing Officer, Pharmacist, Administrative Officer, Matron |
பணியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Online |
விண்ணப்பிக்கும் முறை | 30.06.2023 |
தேசிய ஆயுர்வேத நிறுவனம் காலிப்பணியிடங்கள்:
- Assistant Professor – 16 பணியிடங்கள்
- Accountant – 01 பணியிடம்
- Medical Officer – 02 பணியிடங்கள்
- Nursing Officer – 01 பணியிடம்
- Pharmacist – 01 பணியிடம்
- Administrative Officer – 01 பணியிடம்
- Matron – 01 பணியிடம்
NIA பணிகளுக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Com, B.Sc, Diploma, B.Pharma, D.Pharma, MD, MS, Post Graduate Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
NIA பணிகளுக்கான அனுபவம்:
Administrative Officer, Matron பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NIA பணிகளுக்கான வயது வரம்பு:
- Nursing Officer பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும்,
- Administrative Officer / Matron பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது எனவும்,
- மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PH – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
NIA பணிகளுக்கான சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் ரூ.29,200/- முதல் ரூ.1,77,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேசிய ஆயுர்வேத நிறுவன தேர்வு முறை:
இந்த NIA நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Screening Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தேசிய ஆயுர்வேத நிறுவனம் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 13.05.2023 அன்று முதல் 30.06.2023 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.