சென்னையில் தமிழில் எழுத / படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
வழக்கு அலுவலர்கள் (Case Worker), பாதுகாப்பாளர் (Security Guard), பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) ஆகிய பணிகளுக்கு என பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Chennai OSC – A Centre) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 22.05.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஒருங்கிணைந்த சேவை மையம், சென்னை (Chennai OSC – A Centre) |
பணியின் பெயர் | Case Worker, Security Guard, Multi Purpose Helper |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Offline |
விண்ணப்பிக்கும் முறை | 22.05.2023 |
ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்கள்:
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Chennai OSC – A Centre) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- வழக்கு அலுவலர்கள் (Case Worker) – 06 பணியிடங்கள்
- பாதுகாப்பாளர் (Security Guard) – 01 பணியிடம்
- பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 01 பணியிடம்
கல்வி விவரம்:
- வழக்கு அலுவலர்கள் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Social Work பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவரா இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்கலாம்.
அனுபவ விவரம்:
- வழக்கு அலுவலர்கள் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 01 ஆண்டு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் போதிய ஆண்டு காலம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
- வழக்கு அலுவலர்கள் (Case Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அறிவிப்பில் காணவும்.
ஊதிய விவரம்:
- வழக்கு அலுவலர்கள் (Case Worker) பணிக்கு ரூ.15,000/- என்றும்,
- பாதுகாப்பாளர் (Security Guard) பணிக்கு ரூ.10,000/- என்றும்,
- பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) பணிக்கு ரூ.6,400/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். 22.05.2023 என்ற கடைசி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8 வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை,
சென்னை – 01