வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் – இந்திய வானிலை மையம் தகவல்!
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய புயல்:
இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட வட மற்றும் தென் மாநிலங்களில் கடந்த 1 மாத காலமாக தென் மேற்கு பருவ மழை பெய்தது. இரவு பகலாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு உத்திரபிரதேச அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து கேரளாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு போன்ற பேரிடர்களும் நிகழ்ந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆண்டு இயல்பை விட மழையின் அளவு அதிகமாக இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்தாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான்.. பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் – IRCTC வெளியிட்ட சூப்பர் நியூஸ்!
Exams Daily Mobile App Download
தற்போது அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 22ம் தேதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். பிறகு அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக உருமாறி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.