அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பயிற்சி – ஆளுநர் உத்தரவு!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பயிற்சி - ஆளுநர் உத்தரவு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பயிற்சி - ஆளுநர் உத்தரவு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பயிற்சி – ஆளுநர் உத்தரவு!

தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் 75 அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்போக்கன் இங்கிலீஷ்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய பல்வேறு புதிய திட்டங்களை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தி வருகிறது. 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 2025 ம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து புதுவையிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் 75 பள்ளிகளுக்கு சென்று பள்ளிகளின் தரம், மாணவர்கள் வளர்ச்சி மற்றும் சிறப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறார். இன்று காரைக்கால் மாவட்டம் வந்த கவர்னர் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்னை தெரசா பள்ளியில் மாணவிகளின் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

தமிழக பள்ளி மாணவர்களின் வருகை பதிவு செய்ய புதிய திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்துவது இந்த ஆய்வின் நோக்கம். மேலும் இந்தாண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம் ஆகும். இது குறித்து புதுச்சேரி முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!