பாக்கியாவுக்கு துணையாக நிற்கும் எழில், குடும்பத்தால் தவிர்க்கப்படும் கோபி – அடுத்த கட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை விட்டு விலக முடிவு செய்யும் பாக்கியா வீட்டை விட்டு கிளம்ப அவருக்கு உறுதுணையாக எழில் நிற்கிறார். மறுபக்கத்தில், செழியன் உட்பட வீட்டில் உள்ள அனைவரும் கோபியை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்
இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் தற்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்திற்காக தன்னை தியாகம் செய்து வரும் பாக்கியா என்ற அப்பாவி பெண்ணை ஏமாற்றி கணவர் கோபி தனது காதலியுடன் பழகி கொண்டிருக்கிறார். இந்த ரகசிய காதலை தனது குடும்பத்திடம் இருந்து மறைப்பதற்காக ஏகப்பட்ட நாடகங்களையும், பொய்களையும் சொல்லி வந்த கோபி ஒரு கட்டத்தில் அப்பா ராமமூர்த்தி, மகன் எழில் என ஒவ்வொருவரிடமும் சிக்கி கொள்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், மனைவி பாக்கியாவிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வந்த கோபி கடந்த வாரம் வெளியான எபிசோடுகளில் அவரிடம் கையும்,களவுமாக மாட்டிக்கொண்டார். இந்த உண்மை தெரிந்ததும் அப்பாவி பாக்கியா என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர் அதிரடியாக களத்தில் இறங்கி சரமாரியான கேள்விகளால் கோபியை ஒரு வழி செய்து விட்டார். இதோடு நில்லாமல் கோபி தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுக்கும் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
பக்ரீத் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடிய மணிமேகலை & ஹூசைன் – வைரலாகும் வீடியோ!
இப்போது பாக்கியாவுக்கு துணையாக மொத்த குடும்பமும் நிற்க, கோபி நிர்கதியாகிறார். இது எதிர்பார்த்தது தான் என்றாலும், கோபியின் செயலுக்கு கிடைத்த சரியான பாடம் இது என்று ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டுள்ளனர். இப்போது பாக்கியாவுக்கு துணையாக எழில் அவருடன் செல்ல, கோபியை வீட்டில் உள்ள மற்ற அனைவரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். இதில் குறிப்பாக, கோபியின் செல்லப் பிள்ளையான இனியா ‘அப்பா நல்லவர் இல்லை.
நானும் அம்மாவுடன் போகிறேன்’ என்று சொல்லி மனமுடைந்து போகிறார். அதே போல அப்பாவை ரோல் மாடலாக கொண்ட மகன் செழியனும்,’ இதெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை’ என சொல்லி கேவலமாக பார்க்கிறார். அதே போல அம்மா ஈஸ்வரியும், ‘பாக்கியா வரவில்லை என்றால் நானும் வீட்டை விட்டு போய் விடுவேன்’ என்று சொல்லி வருந்துகிறார். இப்படி தர்ம சங்கடத்துக்குள் தள்ளப்பட்டுள்ள கோபி இனிமேலாவது திருந்துவாரா, பாக்கியா மனம் மாறி குடும்பத்துடன் இணைவாரா என்பதை நோக்கி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் நகர இருக்கிறது.