தமிழக பள்ளி மாணவர்களின் வருகை பதிவு செய்ய புதிய திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவன் பள்ளிக்கு வருகை தந்த நாட்கள், விடுமுறை நாட்கள், விடுப்பு எடுத்த காரணம் என அனைத்தையும் பதிவு செய்ய புதிய திட்டம் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
வருகை பதிவு திட்டம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போல அல்லாமல் இந்தாண்டில் முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் அவ்வப்போது புதுவிதமான கட்டுப்பாடுகள் புகுத்தியபடியே தான் இருந்து வருகிறது. அதாவது, மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயமாக மொபைல் போன் கொண்டு வர கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதையும் மீறி மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் பட்சத்தில் அந்த மொபைல் போன் பறிக்கப்பட்டு பள்ளி முடித்து செல்லும் போது கூட வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் தான் வழிவகை செய்துகொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் விடுப்பு எடுக்கும் போது முன்கூட்டியே ஆசிரியர்களிடம் அனுமதி வாங்கிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
இதனையடுத்து, ஒரு மாணவன் தொடர்ச்சையாக 3 நாட்கள் விடுமுறை எடுக்கிறார் என்றால் கட்டாயமாக ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் விசாரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவனின் பள்ளி வருகையை பதிவு ஆப்பில் E-Profile என்னும் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆசிரியர்கள் கட்டாயமாக மாணவனின் விடுப்பு குறித்த விவரங்கள் மற்றும் விடுப்பு தேவை குறித்த விவரங்களையும் Individual Login பகுதியில் சென்று பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்