இந்தியாவில் அதி வேகமாக பரவும் குரங்கு அம்மை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
ஐரோப்பியா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலேயே பரவி வந்த குரங்கம்மை நோய் முதன் முறையாக கேரளாவில் உள்ள ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த கொரோனா தொற்றையே இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் குரங்கு காய்ச்சலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. முதன் முறையாக கடந்த 1960ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், ஐரோப்பியா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்து விட்டது.
Exams Daily Mobile App Download
கிட்டத்தட்ட 6000 பேருக்கு மேல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குரங்கு காய்ச்சல் இன்னும் சில நாட்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அமீரக நாட்டிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவரின் ரத்த மாதிரி பூனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!
இந்த ரத்த மாதிரி முடிவுகள் வந்த பிறகு தான் அந்த நபருக்கு பரவியிருப்பது உண்மையிலேயே குரங்கம்மை நோய் அறிகுறிகள் தானா என்பது நிரூபணமாகும். மேலும், குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வேறு யாருடனும் இந்த நபர் தொடர்பில் இல்லாத காரணத்தினால் யாரும் பயப்பட தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.