Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – 2வது அறிவிப்பு வெளியீடு!

0
Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் - 2வது அறிவிப்பு வெளியீடு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் - 2வது அறிவிப்பு வெளியீடு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – 2வது அறிவிப்பு வெளியீடு!

இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய ஊழியர்கள் அனைவருக்கும் புதிதாக ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இது ஊழியர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் காரணத்தால், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இது குறித்து 2வது அறிவிப்பு வெளியாகி உள்ளது

புதிய விதிமுறைகள்:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், வேலையை ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கட்டுப்பாட்டை அண்மையில் விதித்தது. இதன் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டியாளர்கள் எனப் பட்டியலிட்டு உள்ள 5 நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் Client-ம் போட்டி நிறுவனத்தின் Client-ம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் 6 மாதம் பணியாற்ற தடை விதித்தது. மேலும் தனது சக போட்டியாளராக டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய விதியை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் ஆக விளங்கும் NITES தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், கடுமையான ஊழியர் ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினையில் இன்போசிஸுக்கு 2வது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 2வது அறிவிப்பை துணை தலைமை தொழிலாளர் ஆணையர் ரெமிஸ் திரு அனுப்பி, இன்ஃபோசிஸ் குழுமத் தலைவர் கிரிஷ் சங்கருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் இன்போசிஸுக்கு தொழிலாளர் ஆணையரால் 1வது நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பதில் அளிக்குமாறு கோரப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில், NITES ஆல் தயாரிக்கப்பட்ட புகார் கடிதம் தங்களுக்கு வரவில்லை என்று இன்ஃபோசிஸ் கூறியது. மேலும் 2வது அறிவிப்பில் அனைத்து குழப்பங்களையும் நீக்கும் வகையில், தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அந்த புகார் கடிதத்தை இணைத்துள்ளது. இந்த நோட்டீசுக்கு மே 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

கடந்த 3 மாதத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 80000 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புகார் முறையாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால் இன்போசிஸ் தோற்றுப்போகும் என பல வழக்கறிஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!