தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் தற்போது தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு அதிகப்படியான செலவினம் ஏற்பட்டு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது.
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – CEO திட்டம்!
இதையடுத்து மீண்டும் அதே ஆண்டு ஜூலையும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்தனர். இதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போரட்டம் நடத்தப்பட்டது. இதனை அரசு ஏற்றுக்கொண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு மண்டல இணை பதிவாளர்களை கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கினர். அதனால் போலீசார் இவர்களை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். அதன்பின் கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் மொபைல் மூலமாக தொடர்பு கொண்டு வருகிற செவ்வாய்க்கிழமை இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தார்.