Post Office செல்வமகள் சேமிப்பு, PPF திட்டங்களில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31 கடைசி நாள்!
இந்திய நாட்டில், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சுகன்யா சம்ரிதி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி(பிபிஎப்), தேசிய ஓய்வூதிய திட்டம்(என்பிஎஸ்) ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகை செலுத்தும் கடைசித் தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. இதனால் இந்த 3 திட்ட கணக்குதாரர்கள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி கணக்கு காலாவதியாவதைத் தவிர்க்கலாம்.
எச்சரிக்கை பதிவு:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான் சேமிப்பின் முதல் தேர்வாக உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டத்திற்கு வட்டி, வங்கிகளை விட அதிகமாக கிடைக்கிறது. சிறு முதலீட்டில் அதிக முதிர்வுத் தொகையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகையை இந்த மாதம் 31ம் தேதிக்குள் டெபாசிட் செய்யாவிட்டால் திட்டம் செயலற்றதாகி விடும் என்று போஸ்ட் ஆபிஸ் அறிவித்துள்ளது.
மாத ஊதியம் ரூ.15000க்கு மேல் பெறுபவர்கள் கவனத்திற்கு – EPFO புதிய திட்டம்!
1.பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். நடப்பு நிதியாண்டு எந்தவிதமான தொகையையும் செலுத்தாமல் இருந்தால், ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் நிலுவைத் தொகைக் கட்டணமாகவும் ரூ.500 வசூலிக்கப்படும்.
2.ஒவ்வொரு நிதியாண்டிலும் பிபிஎப் கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச தொகையை கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு குறைந்தபட்ச தொகையை செலுத்த விட்டால் கணக்கு காலாவதி ஆகிவிடும். மேலும் கணக்கை உயிர்ப்பு செய்யாமல் பிபிஎப் கணக்குதாரர், தன்னுடைய கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து கடனும் பெற முடியாது. எனவே (மார்ச்) இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி விட வேண்டும்.
3.தேசிய ஓய்வூதிய திட்ட கணக்குதாரர்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாமல் இருந்தால், மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். அப்படி செலுத்தாமல் இருந்தால், கணக்கு காலாவதியாகிவிடும். மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.
4.பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்ட செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்ட கணக்குதாரர், நடப்பு நிதியாண்டில் எந்தத் தொகையையும் செலுத்தாமல் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்க வேண்டும். ஒருவேளை நடப்பு நிதியாண்டு எந்தத் தொகையும் செலுத்தாமல் இருந்து அடு்த்த நிதியாண்டு செலுத்தினால், ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும்.