மாத ஊதியம் ரூ.15000க்கு மேல் பெறுபவர்கள் கவனத்திற்கு – EPFO புதிய திட்டம்!

0
மாத ஊதியம் ரூ.15000க்கு மேல் பெறுபவர்கள் கவனத்திற்கு - EPFO புதிய திட்டம்!
மாத ஊதியம் ரூ.15000க்கு மேல் பெறுபவர்கள் கவனத்திற்கு - EPFO புதிய திட்டம்!
மாத ஊதியம் ரூ.15000க்கு மேல் பெறுபவர்கள் கவனத்திற்கு – EPFO புதிய திட்டம்!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பிஎப் செயல்முறை நடைமுறையில் இருக்கும். இதனால் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ரூ.15000க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பிஎப் அலுவலகம் பரிசீலித்து வருகிறது.

ஓய்வூதியம்:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பி எப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மொபைல் எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

இந்த நிலையில் சமீபத்தில் அடிப்படை ஓய்வூதியம் குறித்து பல ஆலோசனைகளை செய்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது அமைப்புசார் துறைகளின் கீழ் ரூ.15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அமைப்புசார் துறைகளில் ஒருவர் பணிக்கு சேரும் போது அவரது அடிப்படை ஊதியம் 15000 த்திற்கு கீழ் பெறும் நபர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார் ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதம் தொகை ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதற்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் 8.33 சதவீதம் தொகை ஊதியத்திற்கு ஒதுக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரூ.15000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பிஎப் அலுவலகம் பரிசீலித்து வருகிறது. தற்போது அடிப்படை ஊதியம் ரூபாய் 15,000க்கு மேல் வாங்கும் ஊழியர்கள் சார்பாக இதுகுறித்து குவாஹாட்டி நகரில் நடக்க இருக்கும் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!