இந்தியாவில் விமான பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

0
இந்தியாவில் விமான பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் - கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
இந்தியாவில் விமான பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் - கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
இந்தியாவில் விமான பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு இந்திய விமான போக்குவரத்து ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்தது. முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? அதிகரிக்கும் புதிய வகை கொரோனோ பாதிப்பு!

இதன் காரணமாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்ததது. அதனால் அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தற்போது விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் CISF காவலர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அனைத்து விமான நிலையங்களும் முறையாக தூய்மைப்படுத்தப்பட்டு, விமானப் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோரை பாதுகாப்பு படையினர் மாநிலங்களின் சட்டத்திற்கு ஏற்ப உள்ளூர் காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் கடந்த சில வாரங்களாகவே தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!