விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் – அரசு முடிவு!
மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கென தனி ரேஷன் அட்டை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு சில கூடுதல் சலுகைகள் கிடைக்கும் எனவும் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறையினர் தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் அவர்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இவ்வாறு தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதற்கான இறுதி தேதி ஜூன் 30 எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களது ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு – தேர்வாணையம் அறிவிப்பு!
இதற்கு உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்தும் செய்திவாசிப்பாளர்களிடம் பேசியுள்ளார். அதில் மாநிலத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தகுதியற்ற ரேஷன் கார்டுகள் உள்ளதால் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பபட்டு விரைவில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதைத்தவிர, மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கென தனி ரேஷன் அட்டை வழங்கவும் உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு சில கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் இன்றுவரை ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.