ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு – தேர்வாணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி எந்தெந்த தேதியில் தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தமாக 10,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன மற்றும் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வான ஆசிரியர்களுக்கே பணியிடங்கள் வழங்கப்படாமல் உள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தான் திறமையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மல்டி டிவைஸ் அம்சம்! புதிய அறிமுகம்!
மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது . மேலும், உடனடியாகத் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது என்பது முடியாத காரியமாகும். இதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே வீடுதேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்கப்படும் என தமிழக அரசு திடீர் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.